Monday, November 16, 2009

STRONG CONDEMN TO THACKERY

தாக்கரேவுக்கு கண்டனம்!!!

சச்சின் ஒரு மகத்தான வீரர் மட்டும் அல்ல. அவர் ஒரு தலை சிறந்த மனிதரும் கூட. அவர் இந்தியர் எனக் கூறி கொள்ள மிகவும் பெருமை அடைகிறார். சச்சின் ஒரு இந்தியர் என்பதில் நாம் அனைவரும் பெருமை அடைகிறோம். சச்சின் இந்த நாட்டின் செல்ல குழந்தை. அனைவரின் அன்பிற்கும் பாத்திரமான ஒரே மனிதர் அவர்.

அவர் இந்தியாவில் பிறந்ததிற்கு நாம் அனைவரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவர் வாழும் அதே காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் மிகவும் பெருமை அடைகிறோம். அப்பேர் பட்ட சரித்திரம் படைத்த ஒரு மனிதனுக்கு கண்டனம் தெரிவித்த பால் தாக்ரேவிற்கு டேஷேஸ் அணியினர் அனைவரும் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

20 ஆண்டுகளாக கிரிக்கெட் உலகத்தின் கதாநாயகனாக வலம் வரும் சச்சின் மேல் நேற்று உலகத்தின் பார்வையே விழுந்தது. அந்த நேரம் பார்த்து தனக்கு விளம்பரம் வேண்டும் என்று சச்சினை வம்பிற்கு இழுப்பது தாக்கரேவிற்கு நல்லதல்ல.

ஏற்கனவே மராட்டிய மக்கள் தாக்கரேவின் சிவா சேனாவிற்கு தேர்தலில் நல்ல பாடம் புகட்டினர். சச்சினை வம்பிற்கு இழுத்து மீண்டும் தன்னை பற்றி மக்கள் பர பரப்பாக பேச வேண்டும் என்று பைத்தியக் காரத்தனமாக நடந்து கொண்ட தாக்கரேவை செருப்பால் அடிக்க வேண்டும் என்று என்று சச்சினின் ரசிகன் மட்டும் அல்ல, ஒவ்வொரு இந்தியனும் நினைப்பான்.

பால் தாக்கரே மறு படியும் இதே போல கோமாளித்தனமான அறிக்கை வெளியிட்டால் டேஷேஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.

பால் தாக்ரேவிற்கு டேஷேஸ் நிர்வாகம் கூறி கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான். அது:

சச்சின் என்று சொல்லடா!!!
தலை நிமிர்ந்து நில்லடா!!!

No comments:

Post a Comment